Friday, January 15, 2010

சிவா சிவா

ஆசைக்குள் அடிபட்ட ஆணும்பெண்ணும்
ஆக்கிவைத்து ஆடவந்த குப்பை தேகம்
எப்போதும் சிற்றின்ப வழியில்நிற்கும்
மறவாதே மறவாதே அதனால் துன்பம்
கற்றிடுவாய் பல நூல்கள் அதனை போக்க
கருத்ததனை உள் வைப்பாய் சொல்லசொல்ல
வாயதனை திறக்காதே குறைகள் பேச
செவி உணர நற்சொற்கள் கேளாய் கேளாய்
முர்க்ககுணம்விட்டொழித்து அமைதி தேடு
மும்மலமும் தீண்டாது ஞானம் காண்பாய் .


No comments: